💥இன்னா நாற்பது என்னும் நூலை இயற்றியவர் கபிலர்.
💥கபிலர் சைவ சமயத்தை சார்ந்தவர்.
💥இன்னா நாற்பதில் உள்ள மொத்த பாடல்கள் 40 இனிய வெண்பாக்கள்.
💥பாவகை வெண்பா
💥இன்னாநாற்பது நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
💥இன்னா என்பதன் பொருள் துன்பம்.
💥இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னாநாற்பது என அழைக்கப்படுகிறது.
💥கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நான்கு கடவுள்களையும் வணங்காமல் இருப்பது துன்பம் என ஆசிரியர் கூறுகிறார்.
💥இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும் நூல்
💥இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.
💥பாரி மன்னனை புகழ்ந்து பாடிய சங்ககாலத்து கபிலர் வேறு, இன்னா நாற்பது பாடிய கபிலர் வேறு.
💥முக்கிய அடிகள்:-
" உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா "
" தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா "
" ஊனைத் தின்று ஊனைப் பெருக்கல் முன்னின்னா "
💥மொத்தம் ஐந்து கபிலர் உள்ளனர்.
1.பாரி மன்னனை புகழ்ந்து பாடிய கபிலர்.
2.இன்னா நாற்பது பாடிய கபிலர்.
3.பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்.
4.பன்னிருபாட்டியல் சில பாடல்களைப் பாடிய கபிலர்.
5.அகவற்பா பாடிய கபிலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக