Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

இன்னா நாற்பது பற்றிய செய்திகள்


💥இன்னா நாற்பது என்னும் நூலை இயற்றியவர் கபிலர்.


💥கபிலர் சைவ சமயத்தை சார்ந்தவர். 


💥இன்னா நாற்பதில் உள்ள மொத்த பாடல்கள் 40 இனிய வெண்பாக்கள். 


💥பாவகை வெண்பா


💥இன்னாநாற்பது நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.


💥இன்னா என்பதன் பொருள் துன்பம்.


💥இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னாநாற்பது என அழைக்கப்படுகிறது. 


💥கடவுள் வாழ்த்தில் சிவன்,  பலராமன்,  திருமால்,  முருகன் ஆகிய நான்கு கடவுள்களையும் வணங்காமல் இருப்பது துன்பம் என ஆசிரியர் கூறுகிறார்.


💥இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும் நூல்


💥இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன. 


💥பாரி மன்னனை புகழ்ந்து பாடிய சங்ககாலத்து கபிலர் வேறு, இன்னா நாற்பது பாடிய கபிலர் வேறு. 


💥முக்கிய அடிகள்:- 

" உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா "


" தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா "


" ஊனைத் தின்று ஊனைப் பெருக்கல் முன்னின்னா "


💥மொத்தம் ஐந்து கபிலர் உள்ளனர். 


1.பாரி மன்னனை புகழ்ந்து பாடிய கபிலர்.


2.இன்னா நாற்பது பாடிய கபிலர். 


3.பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்.


4.பன்னிருபாட்டியல் சில பாடல்களைப் பாடிய கபிலர். 


5.அகவற்பா பாடிய கபிலர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...