Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

நான்மணிக்கடிகை நூல் பற்றிய குறிப்புகள்



💥நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார்.

💥விளம்பிநாகனார் இயற்பெயர் நாகனார்.

💥நாகனார் பிறந்த ஊர் விளம்பி.

💥விளம்பிநாகனார் வைணவ சமயத்தை சார்ந்தவர். 

💥நான்மணிக்கடிகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை- 104 

💥பாவகை-வெண்பா 

💥 பெயர்க்காரணம்:-
நான்கு+மணி+கடிகை= நான்மணிக்கடிகை.

💥கடிகை என்றால் அணிகலன் என்று பொருள். 

💥நான்கு மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன் போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாட்டப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல். 

💥முக்கிய அடிகள்:-

" யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி"

" நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி தாமரை பெண்ணுக்கு அணி நாணம்"

💥துண்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் நான் மணிக்கடிகை. 

💥கடிகை என்பதன் பொருள்- துண்டு, ஆபரணம்,  கட்டுவடம்,  தோள்வளை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...