Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

நாலடியார் நூல் பற்றிய தகவல்கள்


1.நாலடியார் நூலின் ஆசிரியர் - சமணமுனிவர்கள் 

2.தொகுத்தவர்- பதுமனார் (பாடல்கள்- 400)

3.பாவகை-வெண்பா 

4.அறம் சார்ந்த நூல் 

5.நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களைக் கொண்ட நூல் ஆதலால் நாலடி நானூறு,  என்றும் நாலடியார்,  என்றும் வேளாண் வேதம் என்றும் அழைக்கப்படுகிறது.

6.இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது 

அறத்துப்பால்-13 அதிகாரங்கள்,  

பொருட்பால்-24 அதிகாரங்கள்,  

இன்பத்துப்பால்-3 அதிகாரங்கள்.

7.நாலடியாரை ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

8.இந்நூல்  திருக்குறளுக்கு இணையாக வைத்து போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற தொடர்கள் மூலம் அறியலாம்.

*"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"*

*"பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்"*

9.இந்நூலை முப்பாலாக  பகுத்தவர்-தருமர் 

10.இந்நூலுக்கு உரை எழுதியவர்கள் -தருமர்,  பதுமனார்.

1.இந்நூல் முத்தரையர் பற்றி கூறுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...