ஆசிரியர் குறிப்பு :-
💥திரிகடுகம் நூலின் ஆசிரியர்- நல்லாதனார்
💥நல்லாதனார் திருநெல்வேலி மாவட்டம் திருத்து எனும் ஊரை சேர்ந்தவர்.
💥செருஅடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
💥இவர் திருமலை வழிபட்டதால் வைணவ சமயத்தை சார்ந்தவர்.
💥திரிகடுகம் நூலில் நூறு பாடல்கள் உள்ளன.
💥பாவகை-வெண்பா
💥திரிகடுகம் பெயர் வர காரணம் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பன. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் மக்களின் மன மயக்கத்தை போக்கி தெளிவை ஏற்படுத்தும்.
💥திரி என்றால் மூன்று என்று பொருள், கடுகம் என்றால் காரமான பொருள் என்று அர்த்தம்.
💥திரிகடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி என திவாகர நிகண்டு கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக