Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

அடைமொழியால் குறிக்கப்பெறும் தமிழ் நூல்கள் பற்றிய வினாக்கள்


1..இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?

திருக்குறள்


2..இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?

சீவக சிந்தாமணி


3..இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?

கம்பராமாயாணம்


4..இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?

பெரிய புராணம்


5..இயற்கை இன்பகலம் என்று அழைக்கப்படும் நூல் எது?

கலித்தொகை


6..தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?

புறநானூறு


7..காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?

குறிஞ்சிப்பாட்டு


8..அகவற்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

பெருங்கதை


9..சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

நேமிநாதம்


10..இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

பத்துப்பாட்டு


11..அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?

திருவாசகம்


12..இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?

பதிற்றுப்பத்து


13..கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?

தேவாரப்பதிகங்கள்


14.. இரட்டைகாப்பியங்கள் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்,  மணிமேகலை


15..அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?

முதுமொழிக்காஞ்சி


16..குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

மணிமேகலை


17..அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?

குண்டலகேசி


18..குட்டி திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??

நாலடியார்


19..குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?

திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி


20..குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

இலக்கண விளக்கம்


21. குழந்தை இலக்கியம் என்று போற்றப்படும் நூல் எது? 

பிள்ளைத் தமிழ்


22. தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாராட்டப்பெறும் நூல் எது?

திருக்குறள்


23. புறம், புறப்பாட்டு தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?

புறநானூறு


24. ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல்காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்


25. மணநூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - 

சீவகசிந்தாமணி


26. இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம் போன்றஅடைமொழியால் குறிக்கப்படும் நூல் - 

கம்பராமாயணம்


27. திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - 

பெரியபுராணம்


28. குட்டித் தொல்காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - தொன்னூல் விளக்கம்


29. வஞ்சி நெடும்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பட்டினப்பாலை


30. கற்றறிந்தோர் ஏத்தும் தொகை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -

கலித்தொகை


31. நெடுந்தொகை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது?

அகநானூறு


32. பாணாறு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரும்பாணாற்றுப்படை


33. கூத்தராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - மலைபடுகடாம்


34. பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -

முல்லைப்பாட்டு


35. காப்பியப்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - குறிஞ்சிப் பாட்டு


36. உலகப் பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, உத்திரவேதம், திருவள்ளுவம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - திருக்குறள்


37..திருப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?

சுந்தரரின் பதிகங்கள்


38. அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், மணிமேகலை துறவு, பௌத்த காப்பியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - மணிமேகலை


39. புலவராற்றுப் படை, முருகு, கடவுளாற்றுப் படை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - 

திருமுருகாற்றுப்படை


40. வேளாண்வேதம், நாலடி நானூறு, குட்டித் திருக்குறள் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - 

நாலடியார்


41. தமிழ் மறை வேதம், திருவாய் மொழி போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - 

நறுந்தொகை


42. முதுமொழி, உலக வசனம், பழமொழி போன்ற அடைமொழியால்

குறிக்கப்படும் நூல் -  

பழமொழி நானூறு 


43. குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - 

குற்றாலக் குறவஞ்சி


44. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  

பெருங்கதை


45. தமிழர் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  திருமந்திரம்


46. தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  திருவாசகம்


47. தமிழ் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்ய பிரபந்தம்


48. தமிழின் முதற்கலம்பகம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - 

நந்தி கலம்பகம்


49. கிருஸ்துவர்களின் களஞ்சியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -

 தேம்பாவணி


50. தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்? 

 தேவாரம்


51. தென்தமிழ் தெய்வப்பரணி என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -

 கலிங்கத்துப்பரணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...