Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

பாரதியார் பற்றிய முக்கிய வினாக்கள்


1. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் யாருடையது? - பாரதியார்

2. எந்த மன்னர் பாரதியாருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கினார்? - எட்டப்ப நாயக்கர்

3. பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில எந்த ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டது? - 1949

4. முண்டாசு கவிஞன் என்று போற்றபடுகிறவர் யார்? - பாரதியார்

5. பாரதியார் எந்த ஆண்டு பிறந்தார்? - 11/12/1882

6. நவதந்திரக்கதைகள் படைத்தவர் யார்? - பாரதியார்

7. பொன் வால் நரி என்ற நூலை படைத்தவர் யார்? -பாரதியார் 

8. பாட்டுக்கொரு புலவன் யார்? - பாரதியார் 

9. ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றுபாடியவர் யார்? – பாரதியார்

10. ஔவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் யார்? -பாரதியார்

11. பாரதியாரை அடைமொழியால் குறிக்கும் பெயர் எது? - சிந்துக்குத் தந்தை

12. பாரதியாருக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் யார்?  வ.ராமசாமி அய்யங்கார்

13. பாரதியின் முதல் பாடல் எது? - தனிமை இரக்கம்

14. பாரதி தன்னை என்னவென்று அழைத்துக்கொண்டார்? - ஷெல்லிதாசன்

15. பாரதியார் எந்த பத்திரிக்கையின் முலம் தனது அரசியல் கருத்துக்களைமக்களிடம் பரப்பினார்? - இந்தியா

16. பாரதியாரின் இயற்பெயர் என்ன? - சுப்பிரமணியன்

17. பாரதியார் அரசியல் குருவாக யாரை ஏற்றுக்கொண்டார் - பாலகங்காதர திலகர்

18. பாரதியாரின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் அஞ்சல்தலை ------------ ம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்டது – 1960

19. ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் பாரதியார் -----------------என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார் – ஷெல்லிதாசன்

20. பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் -------------------- ஆவார் - கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்

21. பாரதியாரின் ஞானகுரு ---------------------- ஆவார் - நிவேதிதா தேவி

22. பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் - விவேகபானு

23. பாரதியாரின் படத்தினை வரைந்தவர் - ஆர்ய என்ற பாஷ்யம்

24. பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் – கிருஷ்ணசாமி ஐயர்

25. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் ------------------ ஆகியவை ஆகும் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு

26. கேலிசித்திரம் என்பதை பத்திரிக்கைகளில் அறிமுகப்படுத்தியவர் யார்? -பாரதியார்

27. -------------- ஆம் ஆண்டு பாரதியாருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார் – 1887

28. பாரதியார் ----------------- ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் – 1897

29. பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று பாரதியாரை புகழ்ந்து போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

30. பாரதியாரால் தம்பி என அழைக்கப்பட்டவர் - பரலி நெல்லையப்பர்


Subscribe Our Channel 👇👇👇

https://www.youtube.com/c/MASTERSESSION


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...